இயற்கை
பௌர்ணமி-இரவு
கருந்திட்டுக்களாய் கரைகள் இருந்தும்
காரிருளிலோர் அழகு வெள்ளிப் பிழம்பாய்
சூரியன் விட்டெரிந்த சில்லறையாய்
வான்நிறைக்கும் விண்மீன் சிதறல்
நிலவொளியின் அரிதாரப் பூச்சில்
ஆகாயத் திட்டுகளாய் வெண்முகில்கள்
இரவு ராஜ்ய பிரதிநிதிகளாய்
வான் அளக்கும் துரிஞ்சிக் கூட்டம்
பௌர்ணமி காலம்
குரலெடுக்க மறந்த ஊரோடு
ஒன்றிச் செல்லும் நீள் இரவு!
காரிருளிலோர் அழகு வெள்ளிப் பிழம்பாய்
சூரியன் விட்டெரிந்த சில்லறையாய்
வான்நிறைக்கும் விண்மீன் சிதறல்
நிலவொளியின் அரிதாரப் பூச்சில்
ஆகாயத் திட்டுகளாய் வெண்முகில்கள்
இரவு ராஜ்ய பிரதிநிதிகளாய்
வான் அளக்கும் துரிஞ்சிக் கூட்டம்
பௌர்ணமி காலம்
குரலெடுக்க மறந்த ஊரோடு
ஒன்றிச் செல்லும் நீள் இரவு!
*
பின் அந்தி
யுத்தம்
கிழக்கே இருள் விரிக்கும் வானம்
மேற்கே மேகங்களில் கரைந்து மறையும்
நாளின் கடைசி ஒளிக்கீற்று
விண்மீன்களுக்கு எதிராய்
தெருவெங்கும் மண்மீன்கள்
குயிலோசையை மிஞ்சும்
கோயிற் குழலோசை
இரை சேர்த்து
கூடு திரும்பும் பட்சியும்
பணம் சேர்த்து
வீடு திரும்பும் மனிதனும்
ஒன்றாய் ஓர் வழியில்
இயற்கையும் செயற்கையும்
நிகழ்த்தும் பின் அந்தி யுத்தம்
ஒலியும் ஒளியாய் போர் மேகம்.
மேற்கே மேகங்களில் கரைந்து மறையும்
நாளின் கடைசி ஒளிக்கீற்று
விண்மீன்களுக்கு எதிராய்
தெருவெங்கும் மண்மீன்கள்
குயிலோசையை மிஞ்சும்
கோயிற் குழலோசை
இரை சேர்த்து
கூடு திரும்பும் பட்சியும்
பணம் சேர்த்து
வீடு திரும்பும் மனிதனும்
ஒன்றாய் ஓர் வழியில்
இயற்கையும் செயற்கையும்
நிகழ்த்தும் பின் அந்தி யுத்தம்
ஒலியும் ஒளியாய் போர் மேகம்.
காலம்
இறந்தகாலம்
தொடர்ந்து பயணிக்கும்
நினைவுகளாய் என்னோடு
எதிர்காலம்
என்றும் இருக்கும்
திட்டங்களாய் மனதில்
இறந்தகாலம்
தொடர்ந்து பயணிக்கும்
நினைவுகளாய் என்னோடு
எதிர்காலம்
என்றும் இருக்கும்
திட்டங்களாய் மனதில்
நிகழ்காலம்
மறைந்துபோகும் இக்கவிதையிலே
முன்தொடங்கி பின்கரைந்து
மறைந்துபோகும் இக்கவிதையிலே
முன்தொடங்கி பின்கரைந்து
*
காதல்
உன் மேலுள்ள காதலை முடிந்த வரை
மறைக்கவே பார்க்கிறேன்
என்ன செய்வது?
பொருக்கயியலாமல்
கவிதையில் எழுதி விடுகிறேன்..
*
நீ தந்த காயங்கள் எவ்வளவு அழகானவை தெரியுமா?
கொஞ்சம் என் கவிதைகளைப் பார்
கொஞ்சம் என் கவிதைகளைப் பார்
*
தருவதற்கு உன்னிடம் எவ்வளவோ இருந்தும்
ஏன் வலிகளை மட்டும் தருகிறாய்.
ஏன் வலிகளை மட்டும் தருகிறாய்.
*
முதலில் என்னை முழுதாய் களவாடினாய்
இப்பொழுது சிரிக்கிறாய்
இப்பொழுது சிரிக்கிறாய்
*
கொஞ்சம் காயங்களையாவது தா !
தழும்புகளாவது நிறந்தரமாக இருக்கட்டும்.
தழும்புகளாவது நிறந்தரமாக இருக்கட்டும்.
*
பார்வையில் கல் எரிகிறாய்
தோப்பாய் இருந்தால் பழங்கள் தருவேன்
ஆனால் நானோ இங்கு கண்ணாடி
தோப்பாய் இருந்தால் பழங்கள் தருவேன்
ஆனால் நானோ இங்கு கண்ணாடி
*
என்னை முழுதாய் கொள்ளையடித்தாய்
பொறு! உன் பெயராவது சொல்லிவிட்டுப் போ
பொறு! உன் பெயராவது சொல்லிவிட்டுப் போ
*
குழந்தைக்கு ஒரு பொம்மை
உனக்கு என் இதயம்
உனக்கு என் இதயம்
*
உன்னைக் கண்டதுமே கடந்து செல்ல நினைக்கிறேன்
காதல் வலியில் நானாவது கவிதை எழுதிப் பிழைத்துக்கொள்வேன்
பாவம் நீ என்ன செய்வாய்
காதல் வலியில் நானாவது கவிதை எழுதிப் பிழைத்துக்கொள்வேன்
பாவம் நீ என்ன செய்வாய்
*
இந்த விதைகள் யாருக்காகவோ காத்திருக்கின்றன
என்னைப் போல்
என்னைப் போல்
பெண்ணே!
என்னுள் நீங்காமல் இருந்துவிடேன்
ஒரு வியாதியைப் போல்.
என்னுள் நீங்காமல் இருந்துவிடேன்
ஒரு வியாதியைப் போல்.
*
கோபம்
கடந்தகாலம் எரித்திரவமாய்
நிகழ்காலம் அதிலே அழுத்தமாய்
நான் இங்கு ஏவுகணை
நிகழ்வுகளின் எரியூட்டலில்
சிந்தனையின் வேகத்தில்
நான் இங்கு ஏவுகணை
இலக்கு நோக்கிய பாய்ச்சலில்
அதைத் தகர்த்தெரியும் உந்துதலில்
நான் இங்கு ஏவுகணை
முடிவில்,
அழிப்பதும் நானாய்
அழிவதும் நானாய்
நான் இங்கு ஏவுகணை
நிகழ்காலம் அதிலே அழுத்தமாய்
நான் இங்கு ஏவுகணை
நிகழ்வுகளின் எரியூட்டலில்
சிந்தனையின் வேகத்தில்
நான் இங்கு ஏவுகணை
இலக்கு நோக்கிய பாய்ச்சலில்
அதைத் தகர்த்தெரியும் உந்துதலில்
நான் இங்கு ஏவுகணை
முடிவில்,
அழிப்பதும் நானாய்
அழிவதும் நானாய்
நான் இங்கு ஏவுகணை
*
தத்துவம்
அண்ணம் பிரித்து
கிண்ணம் அடைத்து
உணவகத்தில் தரப்பட்ட
மதியச் சாப்பாடு
அழகாய்ச் சொல்லிப்போனது
வாழ்க்கைத் தத்துவம்
உண்பவரின் மனநிலை
பொருத்தது, சாப்பாடு
அளவாய் இருப்பதும்
குரைவாய் இருப்பதும்
அளவாய் நினைப்பவன்
நிறைவாய்ச் சொல்வான்
"அனுதினமும் ஆயிரம்
பேருக்குக் கொடுக்கிறான்
அவனுக்குத் தெரியாதா?
உண்பவன் எவ்வளவு
உண்பான் என்று"
ஆனால்
குறைவாய் நினைப்பவன்
கடிந்து சொல்வான்
"என்விரலே கிண்ணம்
நுழைய மறுக்கிறது" என்று
வாழ்க்கையும் இதுபோலத்தான்
கிடைப்பதில் திருப்திபடாதே
கேட்டுப் பெறு
கூட்டோ பொரியலோ
அதனளவை நீயே
முடிவு செய்
கிண்ணம் அடைத்து
உணவகத்தில் தரப்பட்ட
மதியச் சாப்பாடு
அழகாய்ச் சொல்லிப்போனது
வாழ்க்கைத் தத்துவம்
உண்பவரின் மனநிலை
பொருத்தது, சாப்பாடு
அளவாய் இருப்பதும்
குரைவாய் இருப்பதும்
அளவாய் நினைப்பவன்
நிறைவாய்ச் சொல்வான்
"அனுதினமும் ஆயிரம்
பேருக்குக் கொடுக்கிறான்
அவனுக்குத் தெரியாதா?
உண்பவன் எவ்வளவு
உண்பான் என்று"
ஆனால்
குறைவாய் நினைப்பவன்
கடிந்து சொல்வான்
"என்விரலே கிண்ணம்
நுழைய மறுக்கிறது" என்று
வாழ்க்கையும் இதுபோலத்தான்
கிடைப்பதில் திருப்திபடாதே
கேட்டுப் பெறு
கூட்டோ பொரியலோ
அதனளவை நீயே
முடிவு செய்
*
என் அறை முழுதும் தூசி!
அதன் ஒவ்வாமை ஒருவாறு உறுத்துயது
மொத்தமாக அதை அப்புறப்படுத்த நினைத்தேன்
துடைப்பம் கொண்டு, அதை கலைத்துவிடாமல்
அதன் ஒவ்வாமை ஒருவாறு உறுத்துயது
மொத்தமாக அதை அப்புறப்படுத்த நினைத்தேன்
துடைப்பம் கொண்டு, அதை கலைத்துவிடாமல்
சிறு விசை மூலம் அள்ளி எடுத்தேன்
விசையின் மிகமெல்லிய தூண்டலில்
தூசித் துகளனைத்தும் மேலும்பி
காற்று வெளியை நிறைத்தன
அறையில் கசிந்த சூரிய வெளிச்சத்தில்
அறையில் கசிந்த சூரிய வெளிச்சத்தில்
பொன்னொளி கொண்டு மின்னின
தன் இருப்பை பன்மடங்காக
தன் இருப்பை பன்மடங்காக
பெருக்கிக் காட்டின
மிரண்டு நின்றேன்
மிரண்டு நின்றேன்
சில நொடி அதிர்ச்சிக்கு பின்னர்
அவற்றை கூடியெடுக்க மீண்டுமொறு விசை
அப்போது சில துகள்கள் வந்து என் மூக்கைச் சூழ்ந்தன
பின்னர் என்னை நிலைகுலைய வைக்கும் இரு பெரும் தும்மல்
கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறினேன்
கோபம் என் தலைக்கேறியது
சபித்தேன் ‘ இந்தத் தூசியும் அதன் காரணிகளும் அழிந்து போக,
அவற்றை கூடியெடுக்க மீண்டுமொறு விசை
அப்போது சில துகள்கள் வந்து என் மூக்கைச் சூழ்ந்தன
பின்னர் என்னை நிலைகுலைய வைக்கும் இரு பெரும் தும்மல்
கட்டுக்குள் வைக்க முடியாமல் திணறினேன்
கோபம் என் தலைக்கேறியது
சபித்தேன் ‘ இந்தத் தூசியும் அதன் காரணிகளும் அழிந்து போக,
சுவடே இல்லாமல் இங்கிருந்து மறைந்து போக’
சொல்லி முடித்த மறு நொடி என் முன் கும்மாளமடித்த தூசியாவும் காணமல்போனது
அப்பழுக்கற்ற தூய்மை
காணும் திசை எங்கும் நிறைந்தது
மாற்றம் மேலும் தொடர்ந்தது
என்னை சுற்றி அத்தனையும் அழிந்தது
சுவடில்லாமல் மறைந்தது
நான் சபித்தத்தைப் போலவே..
சூன்யம் கட்டற்று என்முன் நீண்டு கொண்டே செல்ல
காரணம் புரியவில்லை
மாற்றம் மேலும் தொடர்ந்தது
என்னை சுற்றி அத்தனையும் அழிந்தது
சுவடில்லாமல் மறைந்தது
நான் சபித்தத்தைப் போலவே..
சூன்யம் கட்டற்று என்முன் நீண்டு கொண்டே செல்ல
காரணம் புரியவில்லை
இறுதியாக நானும் மறையத் தொடங்கினேன்!
*
பயணம்
ரெயிலின் தொடர் ஓட்டம்
பொடிநடையாய் ஆகும் தருணம்
ரெயில் தன்னை ஆசுவாசப்படுத்தும்
அந்த 15 நொடிகள்
நான் அவனைப் பார்த்தேன்
ரெயிலைப் பிடிக்க எண்ணிய அவனது பதற்றம்
ஓட்டமாய் அவனது கால்களில் தெரிந்தது
அடுத்த சந்திப்பை நோக்கிய நகர்வு
நரம்புகளில் அண்ணீர் பாய்ச்சும்
ரெயிலின் கூவலோடு
'அவன் எங்கே? ஏறி விட்டானா? '
இல்லை, தொடுமளவு தூரத்தில் இருக்கிறான்
தொடுவானம் தொடும் அந்திச் சூரியனாய்
"அருகிலிருப்பவர் யாரேனும் சற்று கை கொடுக்கூடாதா அவன் உள்ளே வர"
ஒலிகளற்ற மனக்குரல்
நகரும் காட்சிகளில் கரைந்தது
கட்டப்பா பாகுபலியை கொன்ற காரணத்தை அறியவும், பகிரியின் முணுமுணுப்பிற்கு சிரம் தாழ்த்தியும்
இன்ன பிற செயலிகளிலும் லயித்திருந்தார்கள் ரெயில் ஏறிகள்
அவனது பதற்றம், துன்புறுத்த ஆளின்றி
ரெயில் சக்கிரங்களில் சிக்கி உடைந்து போனது
நிகழ்வுகளில் சிறு மாற்றம் நொடிகளில் நிகழ்கிறது
அவனது நெற்றிச் சுருக்கம் தளர்ந்து
நிம்மதியின் அச்சு திட்டு திட்டாய் அவன் முகத்தில்..
யாரேனும் கைகொடுக்கிறார்களா?
இல்லைவே இல்லை
அவன் பிடிப்பதற்கான கை-யை காட்டுகிறார்கள்
இந்த அவசர யுகத்தில் கை காட்டினாலே புண்ணியம் தான்
புண்ணிய ஆத்மாவை
பயணிகளுக்கும் , பழக்கூடைகளுக்கும் மத்தியில் தேடுகிறேன்
அவர் ஆணா? பெண்ணா? அலியா?
இவர்களில் யாரும் இல்லை.
அது 'அது'
அது தனது கம்பிகளில் ஒன்றைக் காட்டி ,
அவனது கை பிடிக்கச் சொல்லி
தன்னுள் ஏற்றுகிறது
இப்போது அவன் அதனுள்.. இல்லை ரெயிலினுள்
எங்களில் ஒன்றாய்
என்னுடைய நிம்மதி, பெருமூச்சாய்
ஜன்னல் காற்றில் கலக்கிறது
ஒரு நிமிடம் .....
நான் இதையெல்லாம் சொல்வது அவனைப் பார்த்ததாலா?
இல்லை
முந்தைய சந்திப்பில் நான் ரெயில் துரத்திப் பிடித்த போது
என்னுடைய பதற்றம் உணர்ந்தவரின்
சிந்தனை வளையில் நான் சிக்கியதன் விளைவா?
எது என்னவோ
சந்திப்பு நெடுகிளும்
புண்ணியம் சேர்த்துப் போகும் அசட்டையாய் தன் பயணத்தை தொடர்கிறது
யாரோ ஒருவரின் நரம்புகளில்
அண்ணீர் பாய்ச்சும் கூவலோடு
அண்ணீர் - Adrenalin
பொடிநடையாய் ஆகும் தருணம்
ரெயில் தன்னை ஆசுவாசப்படுத்தும்
அந்த 15 நொடிகள்
நான் அவனைப் பார்த்தேன்
ரெயிலைப் பிடிக்க எண்ணிய அவனது பதற்றம்
ஓட்டமாய் அவனது கால்களில் தெரிந்தது
அடுத்த சந்திப்பை நோக்கிய நகர்வு
நரம்புகளில் அண்ணீர் பாய்ச்சும்
ரெயிலின் கூவலோடு
'அவன் எங்கே? ஏறி விட்டானா? '
இல்லை, தொடுமளவு தூரத்தில் இருக்கிறான்
தொடுவானம் தொடும் அந்திச் சூரியனாய்
"அருகிலிருப்பவர் யாரேனும் சற்று கை கொடுக்கூடாதா அவன் உள்ளே வர"
ஒலிகளற்ற மனக்குரல்
நகரும் காட்சிகளில் கரைந்தது
கட்டப்பா பாகுபலியை கொன்ற காரணத்தை அறியவும், பகிரியின் முணுமுணுப்பிற்கு சிரம் தாழ்த்தியும்
இன்ன பிற செயலிகளிலும் லயித்திருந்தார்கள் ரெயில் ஏறிகள்
அவனது பதற்றம், துன்புறுத்த ஆளின்றி
ரெயில் சக்கிரங்களில் சிக்கி உடைந்து போனது
நிகழ்வுகளில் சிறு மாற்றம் நொடிகளில் நிகழ்கிறது
அவனது நெற்றிச் சுருக்கம் தளர்ந்து
நிம்மதியின் அச்சு திட்டு திட்டாய் அவன் முகத்தில்..
யாரேனும் கைகொடுக்கிறார்களா?
இல்லைவே இல்லை
அவன் பிடிப்பதற்கான கை-யை காட்டுகிறார்கள்
இந்த அவசர யுகத்தில் கை காட்டினாலே புண்ணியம் தான்
புண்ணிய ஆத்மாவை
பயணிகளுக்கும் , பழக்கூடைகளுக்கும் மத்தியில் தேடுகிறேன்
அவர் ஆணா? பெண்ணா? அலியா?
இவர்களில் யாரும் இல்லை.
அது 'அது'
அது தனது கம்பிகளில் ஒன்றைக் காட்டி ,
அவனது கை பிடிக்கச் சொல்லி
தன்னுள் ஏற்றுகிறது
இப்போது அவன் அதனுள்.. இல்லை ரெயிலினுள்
எங்களில் ஒன்றாய்
என்னுடைய நிம்மதி, பெருமூச்சாய்
ஜன்னல் காற்றில் கலக்கிறது
ஒரு நிமிடம் .....
நான் இதையெல்லாம் சொல்வது அவனைப் பார்த்ததாலா?
இல்லை
முந்தைய சந்திப்பில் நான் ரெயில் துரத்திப் பிடித்த போது
என்னுடைய பதற்றம் உணர்ந்தவரின்
சிந்தனை வளையில் நான் சிக்கியதன் விளைவா?
எது என்னவோ
சந்திப்பு நெடுகிளும்
புண்ணியம் சேர்த்துப் போகும் அசட்டையாய் தன் பயணத்தை தொடர்கிறது
யாரோ ஒருவரின் நரம்புகளில்
அண்ணீர் பாய்ச்சும் கூவலோடு
அண்ணீர் - Adrenalin
*
No comments:
Post a Comment